”யூடியூப் மூலம் போட்டுக் கொடுத்த ஐ.டி-விங் நிர்வாகி” கொலை வெறி தாக்குதல் நடத்திய பாஜக பொதுச்செயலாளர்… சென்னையில் பரபரப்பு!!!

சென்னை, கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பாஜகவில் சென்னை கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளராக பதவி விகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக ஐடி விங் நிர்வாகி ராஜேஷ், யூடியூப் சேனல் ஒன்றில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா குறித்து சில தகவல்களை யூடியூபில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவ்வீடியோவில் எஸ்.எஸ்.சுப்பையாவிற்கு சொந்தமான உணவகத்திற்குள் மதுபானம் விற்பனை செய்யும் காட்சிகளையும் ராஜேஷ் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்வீடியோவானது தமிழ்நாடு முழுவதும் நேற்று பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக நிர்வாகி சுப்பையா, தனது அக்கா மகன் முத்தரசன் மற்றும் நங்கநல்லூர் பாஜக மண்டல் தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு பழவந்தாங்கல் எம்.எம்.டி.சி காலனி அருகே வைத்து ராஜேஷை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷை அந்த வழியாக வந்த போலீஸ்காரர் ஒருவர் மீட்டுள்ளார். தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.எஸ்.சுப்பையா உள்ளிட்ட 3 பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் ஒரே கட்சியைச் சார்ந்த நிர்வாகியை மற்றொரு பாஜக நிர்வாகி கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோவானது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp