தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தில் அமைந்துள்ளது தியாகி இம்மானுவேல் சேகரன் சிலைக்கு அகில இந்திய மாமன்னன் சுந்தரலிங்கம் பேரவை தலைவர் L.k முருகன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு L k முருகன் அவர்கள் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாடு முழவதும் பல்வேறு தலைவர்கள் அரசியல் கட்சியினர் பரமக்குடியில் அவரது நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அங்கு சொல்லமுடியாத தலைவர்கள் அவரது படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செப்டம்பர் 11 சமூக விடுதலைக்காக தன் இன்னுயிரை நீத்த சமூகப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் தினம் இன்று. தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். 1957 காலகட்டத்தில் தான் வாழ்ந்த ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இரட்டை குவளை முறை மிகவும் கொடியதாக இருந்தது.
அது மட்டுமல்ல சாதிய பிரச்சனை, சாதிய தூண்டல்கள், அந்த காலகட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் இந்த கொடுமைகளை கண்டு கொதித்து எழுந்தார். தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பிறந்தாலும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக தன் இன்னுயிரை 33 வயதிலேயே கொடுத்தவர்.
அந்த காலகட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் , அவர்களுடைய கட்சிகளான காங்கிரஸ் ஃபார்வர்ட் பிளாக் போன்ற கட்சிகளுக்கு இடையே நடந்த மோதல் இவருடைய படுகொலையை திட்டமிட்டே தீர்மானித்திருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 33 வயதிலேயே இந்த மண்ணுக்காக, இந்த மக்களுக்காக, சமூக நீதி விடுதலைக்காக தன் உயிரை கொடுக்க துறந்தார் என்பது தான் முக்கியமானது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவருக்கும் குடும்பம் இருந்தது, பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அப்படி இருந்தும் தனது இன்னுயிரை இந்த மக்களுக்காக கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் அவர் எப்படி சாதி தலைவராக முடியும். ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்காக வாழ்ந்த சமூக விடுதலையை முழக்கமிட்ட வீரமிக்க தலைவர் தான் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய சமத்துவக் கொள்கையும்,புரட்சியாளர் அம்பேத்கர் அவருடைய சமூக நீதிக் கொள்கையும் ஏற்றுக்கொண்டவர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அப்படிப்பட்ட தியாகி இமானுவேல் சேரன் அவர்கள் முற்போக்கு சிந்தனையோடு ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனைவருக்காகவும் விடுதலை வேட்கையோடு களம் ஆடினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.