இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு கோயில்களில் திருமணம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் விஸ்வநாதசுவாமி திருக்கோயில் சிவன் கோவிலில் வைத்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டுன் ஒட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் சாரகம் சார்பில் 2வது இலவச திருமணம் நடததி வைக்கப்பட்டது .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மணமகன் – k. சுரேஷ் குமார் தந்தை பெயர் கனகராஜ், மேல மீனாட்சி புரம், ஓட்டப்பிடாரம் வட்டம் மணமகள் – இடக்கியம்மாள் – தந்தை ஷண்முக நாதன், மேல வீரபாண்டியா புரம், ஓட்டப்பிடாரம் வட்டம் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 50,000 மதிப்பிலான சீர்வரிசை திருமாங்கல்யம் 4 கிராம், மாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், , மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த திருமண விழாவில் இந்து சமய அறநிலையத்துறை, தூத்துக்குடி, இணை ஆணையர் மண்டலம் சார்பாக…ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் திருமதி.முப்பிடா என்ற திவ்யா தலைமையில் இலவச திருமணம் நடத்தி வைக்கப் பட்டது..திருக்கோயில் அர்ச்சகர் விக்னேஷ் , திருக்கோயில், எழுத்தர் ஷண்முக ராஜா மற்றும் பலர் மணமகன் மணமகள் உறவினர்கள் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.