கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இன்று, மதுக்கரை அடுத்த மாவுத்தம்பதி, புதுப்பதி பகுதியில் உள்ள பட்டியலின வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் மதிவாணன் மற்றும் சார்பு நீதிபதி கே எஸ் எஸ் சிவா எடுத்துரைத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பொழுது மலைவாழ் மற்றும் பழங்குடியினருக்கு கிராம சபா மூலம் அவர்களது உறைவிடம், விவசாயம் செய்யுமிடம், ஆகியவற்றிற்கு வரி விதிப்பு செய்யப்பட்டு அனுபவிக்க உரிமை உள்ளது, என்றும், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமான அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக சம்மதம் இல்லாமல், அவர்களை மிரட்டியோ, போலி ஆவணங்களை உருவாக்கியோ ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.