கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் அக்கா மலையில் இருந்து வால்பாறைக்கு குடிநீர் குழாய் பதிப்பு மூன்று வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாததால் அப்பகுதிகளில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வழியே வந்த அக்கா மலை ஜெபராஜ் மகள் மகன் இருவரும் அவர்களுடைய உறவினர்களை காண வந்த பொழுது எதிர் பாராதவிதமாக குவித்து வைத்து இருந்த மண் குவியலால் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டு லேசான காயத்துடன் உயிர் தப்பினர் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது அப்பகுதியில் உள்ள ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுனர் இடம் கூறிய பொழுது அவர்கள் முறைகேடாக பதில் அளிக்கின்றனர். இதனால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
இது போன்ற விபத்து தடுக்க வால்பாறை நகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு பஸ் எதிரே வந்ததனால் நிலை தடுமாறி வாகனம் மண் சரிவு ஏற்பட்டு லேசான காயத்துடன் அவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுபோன்ற சம்பவம் அதிக அளவு தினசரி நடந்து கொண்டே தான் இருக்கிறது இதனைக் கண்டு உடனே வால்பாறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய குழாய் பதிக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.