தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் 3வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் செப்.16ம் தேதி முதல் 21ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குறுக்குச்சாலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் (பொறுப்பு) வேல்ச்சாமி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரலட்சுமி, கிராம வள பயிற்றுநர்கள் ஜெயபாலா,பவித்ரா,மாரியம்மாள்,முத்துலட்சுமி,ரேவதி,ஆதிலட்சுமி,வீரலட்சுமி,பணித்தள பொறுப்பாளர்கள் கஸ்தூரி,கல்பனா,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பணித்தள பொறுப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் புதியம்புத்தூர்,பட்டினமருதூர் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.