குளுகுளு மூணாறில் குமுறும் சுற்றுலா பயணிகள்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதி தற்பொழுது வெப்பநிலை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. சில நேரங்களில் ஜீரோ டிகிரிக்கு குறைவாகவும் மைனஸ் 2 டிகிரி வரைக்கும் குளிர் நிலவுவதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதே சமயத்தில் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. சுற்றுலா பயணிகள் சீதோசன நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் ஒரு பக்கம் சரியான வாகனங்களை பார்க்கிங் செய்யும் வசதி இல்லை என்றும் வாகனங்கள் தக்க சமயத்தில் சென்றடைய முடிவதில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

காலசீதோசன நிலை நன்றாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தாலும் உள்ளூர்வாசிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அவசர சூழ்நிலைகளில் ஆஸ்பத்திரிக்கு செல்லவும் மற்றும் தங்கள் அலுவல்களை பார்க்கவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வாகன நெரிசலில் அவர்களும் சிக்கித் தவிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. எனவே கேரளா அரசு சுற்றுலா தளத்தில் ஆங்காங்கே சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு பார்க்கிங் வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளா அரசுக்கு போதிய வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகரிக்கவும் செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp