
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் துவார் அருகே உள்ள குளப்பம் பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் சுகாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க துவார் கிளைத் தலைவர் திவ்யதர்ஷினி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய செயலாளர் ரகமதுல்லா தலைமை வகித்து பேசும் பொழுது;
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கை சூழல் மண்டலத்தைப் பாதுகாக்கவும், மாசுபடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதில் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன, மாசுபாடு குறைப்பு, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், வளங்களை நிலையாக நிர்வகித்தல், மற்றும் காடழிப்பு போன்ற சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பது ஆகியவை முக்கிய இலக்குகளாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வரும் தலைமுறையினருக்கான ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான இன்றியமையாத பணியாகும், மேலும் இது மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கும் அடிப்படையானது.
சுகாதாரம்:
சுகாதாரம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதாகும், இது தூய்மையான பழக்கவழக்கங்கள், சரிவிகித உணவு, உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது; சுகாதாரம், தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது,
சுகாதாரத்தின் முக்கியத்துவம்:
நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு, கிருமிகள் பரவாமல் தடுக்க, கைகளைக் கழுவுதல், தும்மும்போது வாயை மூடிக்கொள்ளுதல் போன்றவை அவசியம்.
உடல் ஆரோக்கியம்:
ஆரோக்கியமான உணவு, போதுமான நீர் அருந்துதல் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி உடல் வலிமையைத் தரும். மன ஆரோக்கியம் தியானம் போன்ற பயிற்சிகள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.
சுற்றுப்புறத் தூய்மை, நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருப்பது, கிருமிகள் வளர்வதைத் தடுக்கவும், சுகாதாரத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பேசினார்.
நிறைவாக அறிவியல் இயக்க கிளை பொருளாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.








