தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் வழங்கினார். தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஊராட்சி களின் பயன்பாட்டிற்கு பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகள் வழங்கப்பட்டது.
2022-23 நிதியாண்டிற்காக ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 77 வண்டிகள் சுமார் ரூபாய் 2,44,000 மதிப்பில் ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, ஆரைக்குளம் ,குலசேகரநல்லூர் கொல்லன்கிணறு ,உட்பட்ட 77 பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விழாவில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.